Monday, July 23, 2012

"சூர்யா":- மனங்கவர்ந்த நாயகனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...


வ்வொருவரிற்கும் ஒவ்வொரு நாயகன் இல்லாமல் இல்லை. என்னை கேட்டால் சூர்யாவுக்கே எனது வாக்கு. நடை, உடை, ஸ்டைல்  என அனைத்திலும் இளையவர்களை கவர்வதிலே சூர்யாவுக்கு நிகர் எவருமில்லை. அச்சொட்டான நடிப்பும், ஆடம்பரமிலாத்தன்மையும் சூர்யாவிலே எனக்கு பிடித்தவை. எனக்கு விருத்தெரிய தொடங்கியதற்கு பின் வந்த சூர்யாவின் எல்லா படங்களையும் முதல் காட்சியாக ரசித்தவன் என்பதிலே எனக்குள் ஒரு புளுகம்.

"7ம் அறிவு", "ரத்தசரித்திரம்", "சிங்கம்", "ஆதவன்", "அயன்", "வாரணம் ஆயிரம்", "வேல்" எனப்பல எனது மனதிலே நீங்காதவை.
சூர்யாவைப்பற்றி எனக்கு தெரிந்தவற்றையும், நண்பர்கள் பகிர்ந்தவற்றையும் தொகுக்கின்றேன் என் நாயகன் சூர்யாவின் பிறந்த நாள் பரிசிற்காக..


நடிகர், எழுத்தாளர் ,ஓவியர் சொற்பொழிவாளர் எனப்பல பரிணாமங்களைப் பெற்ற சிவகுமாருக்கும் , லக்‌ஷ்மி அம்மையாருக்கும் சென்னையிலே 1975 ஜூலை 23ந் திகதி மகனாக பிறந்த சரவணன் தான் இந்த சூர்யா. 
                                                     

சென்னை லோயலாக் கல்லூரியில் வணிகத்துறைப்பட்டம் பெற்ற சரவணன் சினிமாவிற்காக தனது பெயரை ”சூர்யா”வாக்கினான். 
"பூவெல்லாம் கேட்டுப்பார்", முதல் "காக்க காக்க", "சில்லுன்னு ஒரு காதல்", "பேரழகன்" என ஏழு படங்களில் தன்னுடன் இணைந்து நடித்த ஜோதிகாவை 11.11.2006 அன்று காதல் திருமணம் புரிந்தார். தியா, தேவ் என இரு குழந்தைகளின் தந்தையானார்.
                                 
வசந்த் இயக்கி மணிரத்னம் தயாரித்த ”நேருக்கு நேர்” என்னும் திரைப்படத்தில் 1997ல் சினிமாவுக்கு அறிமுகமான சூர்யா 24 படங்களில் கதாநாயகனாகவும், ”பிதாமகனில்” விக்ரமுடன் துணை நடிகராகவும் கிட்டத்தட்ட 6 படங்களில் அதிதி நடிகனாகவும் அசத்தியிருக்கின்றார்.
                                                                                       
2001ல் பாலாவின் இயக்கத்தில் வந்த “நந்தா” சூர்யாவின் சினிமா வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனை. ஒரு சிறைக்கைதியாகவும்,தாயில் பெரும் பாசங்கொண்டவராகவும் வெகு சிறப்பாக நடித்தார்.
இதற்காக அவ் ஆண்டி(2001)ல் தமிழ் நாட்டின் மாநில சிறந்த நடிகருக்கான விருதினையும் சுவீகரித்தார்.இதுவே சூர்யாவின் சினிமா வாழ்வின் முதல் விருது.
தவிர 2008ல் வெளி வந்த “வாரணம் ஆயிரம்” சூர்யாவுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்தது. இப்படத்தில் 16வயது இளைஞனாகவும்,65 வயது வயோதிபராகவும் நடிக்க வேண்டியிருந்தது. உடலை வருத்தி எடையினை குறைத்து மரண விளிம்பிலிருக்கும் ஒரு நோயாளியாக பரிதாபமாக தோன்றி அனைவரையும் அசத்தி இறுதியில் மரணத்தையும் தழுவுகின்றார்.
                                                 

”7ம் அறிவிற்காக” வியட்னாமிலே குங்பூ, கராத்தே ஆகிய கலைகளை பயின்று திரையிலே டொங்லீயுடன் மோதி ஜெயிக்கும் இறுதிக் கிளைமக்ஸ் சுப்பர்.
                                                  
”கஜினி”யும் மாறுபட்ட நடிப்பிற்கு நல்ல பெயரை ஈட்டித்தந்திருக்கின்றது. ”கஜினி” இந்தியில் சல்மான் கானினால் நடிக்கப்பட்டது.
தற்போது ”பிதாமகன்” இந்தியில் திரைப்படமாக்கப்படவுள்ளது.
தற்போது சூர்யாவின் ”மாற்றான்”, ”சிங்கம்-2” என்பன விரைவாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சொந்தமாக ”ஸ்டூடியோ கிறீன்” மூலம் சில திரப்படங்களையும், தம்பி கார்த்தியின் திரைப்படங்களையும் விநயோகித்தார். கார்த்தியின் “சகுனி” ”ஸ்டூடியோ கிறீன்” மூலமே வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
சூர்யா இதுவரை தமிழ்நாட்டரசின் மாநில விருதுகள்-3, பிலிம் பெயார் விருதுகள்-6, விஜய் டீ.வி விருதுகள்-5, சவுத் ஸ்கோப்(ICON) விருது-1, ஸ்டார் ஸ்கிரீன் (ஹிந்தி) விருது-1 , ஸ்டார் டஸ்ட் விருது-1 என மொத்தமாக 17 பிரமாண்டமான விருதுகளினை வென்றுள்ளார்.
                                  




”மாற்றானா”? ”சிங்கம்-2” ? எது முன்பதாக திரைக்கு வருகின்றதோ அதிலே சூரியாவை ரசிக்கும் வரை…..
                                                     


3 comments:

  1. பதிவு அருமை என் மனம் நிறைந்த நாயகனுக்கு இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்தும் வாசியுங்கள்,என்னை/எனது எழுத்துக்களை
      விமர்சியுங்கள்...

      Delete

பிரபல்யமான பதிவுகள்