முதல் பதிவு என்றபடியால எதை எழுதுவது? எப்பிடி எழுதுவது?? என்ற வினாக்கள் என்னை வதைக்கின்றன. இருந்தும் இப்ப விளையாட்டுகள் கொஞ்சம் சூடு பிடிச்சிருக்கிரதாலே, அதை பற்றி எழுதுவம் எண்டு யோசிச்சன் . அதுவும் எங்கட ஆக்களுக்கு கிரிக்கட் எண்டால் தலைகால் புரியாத மகிழ்ச்சி!!
கிரிக்கட் ஆரம்பிச்சதெல்லாம் பெரிய வரலாறாம்! கனக்க கனக்க மாத்தி தானாம்
இந்தளவில வந்ததிருக்கெண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்.
எனக்கு கிறிக்கட் பற்றிப்பெருசா ஒண்டும் தெரியாது பாருங்கோ, பட்டை பிடிச்சு வார பந்தை அடிக்கவும், பந்த விக்கட்டுக்கு போடவும், ஆரும் அடிக்கிற பந்த ஓடி பிடிக்கவும் தான் தெரியும்.
இதுக்குள்ள கல்லூரியில நடந்த ஒரு விஷயம் .ஒருத்தரும் கோவிக்காதேங்கோ. எழுதினாப்பிறகு சிலரை சந்திக்க நேர்ந்தால் என் கதை கந்தல்!
யாரோடையும் மனத்தையும் புண் படுத்துவது எனது நோக்கம் அல்ல.
எங்கட கல்லூரிக்கும் மத்திய கல்லூரிக்கும் ஒரு கிரிக்கட் மட்ச். நான் நினைகிறன் நாலு வருஷம் இருக்கும் இது நடந்து பாருங்கோ! . கிருஷ்சோபனும் எங்கட டீம்ல இருந்தவன். கொஞ்சம் குண்டு எண்ட படியா எங்கட 'கோச்' அவனை ஸ்லிப்பில விட்டவர்.அந்த மச்சில தான் இது நடந்தது!!!. கிருசோபன்க்கும் அப்ப விளையாட்டு துறைக்கு பொறுப்பா இருந்த சேருக்கும் சின்ன கேம் முன்ன பின்ன கிரவுண்டுக்கு வராத அந்த சார் அண்டைகெண்டு வந்திட்டார். எங்களுக்கு எண்டா பெரிய அதிசயம் நாலு வருசமா கிரவுண்டுக்கு வராத சார் வந்தா பின்ன என்ன???? .
அந்த நேரம் பாத்து மத்திய கல்லூரிகாரங்க அடிக்க வெளிகிட்டாங்க. உடன சூடான சார் சிலிப்சில நிக்கிற கிருஷ்சோபன் ஏன் "வாக்" பண்ம நிக்கிறான்எண்டார்!!!! .
விளங்கினாசிரியுங்கோ!! மற்றவைஇருட்டின பிறகு லைட்போஸ்ட்டில ஏறி நிண்டு சிரியுங்கோ!!!இப்பிடியான ஆக்கள்இருக்கிற வரைக்கும் எங்களுக்கு விடிவே இல்லை!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment