முதலிலே பொங்கலைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைவரிற்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
உழவர் திருநாள் தமிழர் பெருநாள் தைப்பொங்கல் நன்நாள். பொங்கல் மங்கலம் எங்கும் தங்கிட இன்பங்கள் எங்கும் பொங்கித் ததும்பிட வந்ததே தைத்திருநாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல தை வந்தால் மகிழ்ச்சியும் கூட வரும்.
உழைக்கும் வர்க்கத்தினரால் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாகவே இத் தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றது. நாளும் பொழுதும் உழவரோடு சேர்ந்து பாடுபட்டு உழைத்த பசுக்கூட்டங்களுக்கும் காளைகளுக்கும் பொங்கிப் படைக்கும் நாளே பட்டிப்பொங்கல் திருநாள்.
ஒவ்வொரு பண்டிகைகளும் விழாக்களும் எதற்காக எம்மிடத்திலே தரப்பட்டிருக்கின்றன. உண்டு உறங்கி கொண்டாடி மகிழ்வதற்கா? இல்லை. தனியே அந்த நோக்கங்களிற்காக மட்டும் எமக்கு இப்பண்டிகைகள் விழாக்கள் தரப்படவில்லை. ஒவ்வொரு கொண்டாட்டங்களின் போதும் எம்முள் இருக்கின்ற ஒவ்வொரு தீய விடயங்களை தீய குணங்களை அகற்றி வையகத்தில் மாண்பு பெறுவதற்காகவே இப்பண்டிகைகள் படைக்கப்பட்டிருக்கின்ற உண்மைத் தத்துவத்தை உணர முற்பட வேண்டும்.
மனித மாண்பை பாதிக்காத நவீன தத்துவத்தை வரவேற்போம். உலகிலே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மொழிகளில் முதலிடம் பெறுவது தமிழ் மொழியே. தமிழர்கள் தமக்கென்று தனித்துவமான பண்பாடு பாரம்பரியங்களைக் கொண்டிருப்பதனாலேயே இன்றும் தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழர் பண்பாட்டை போற்றாத மேதைகள் இல்லை. தம் கவிவரிகளிற்குள் சிறைப்பிடிக்காத கவிஞர்கள் இல்லை எனலாம். அந்தளவிற்கு தமிழ்மொழி ஆழப் பரந்திருக்கின்றது. மொழி என்கின்றபோது அதை உயிர்நாடியாக சுவாசிக்கும் இனத்தவர்கள் வாழ்வியலும் தவிர்க்க முடியாததுவே.

அப்படியான தமிழர் வாழ்வியல் பண்பாடுகள் தடம்மாறி சென்றுகொண்டிருக்கின்றது. ஒருவனுக்கு ஒருத்தி என்றும் கற்பில் சிறந்தவர் கண்ணகி என்றும் காவியங்களில் எழுத்து வடிவில் இருந்தால் போதாது. அது எந்த அளவிற்கு நடைமுறையிலிருக்கின்றது என்பது வேதனைப்பட வேண்டியதொன்றே.
கற்பதற்காக பள்ளி சென்ற மாணவி கர்ப்பமுறுவதும் தந்தையாலே மகள் வஞ்சிக்கப்படுவதும் நடு இரவிலே ஏழு வயது சிறுமி பதின்ம இளைஞனால் இம்சிக்கப்படுவதும் பாதையோரங்களில் எல்லாம் இம்சைகள் தொடர்வதும் தமிழர் பண்பாட்டிற்கு ஆக்கபூர்வமாக பங்களிப்பு செய்யுமா?
பட்டாசு கொழுத்தி பொங்கிப்படைத்து உண்டு மகிழும் பொங்கலாக மட்டும் இத்திருநாள் அமைந்துவிடக் கூடாது. அதனையும் தாண்டி தமிழர் பண்பாட்டியல் உறுதியான வரம்பிற்குள் வரச்செய்யும் வரலாறாக மாற வேண்டும்.
சட்டம் போட்டு தடுப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கின்றது என்று நாம் ஒதுங்கி விட்டால் தமிழன் என்று சொல்கின்ற போது நெஞ்சை நிமிர்த்த முடியாது. மாறாக பூமாதேவியை முகத்தரிசனமே செய்ய வேண்டியேற்படுவது தவிர்க்க முடியாததுவே.
எவற்றிற்காக இச்சம்பவங்கள் அரங்கேறுகின்றன என்பதை உணர்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைக்கின்ற போது வளம்மிக்க சமுதாயம் துளிர்விட ஆரம்பித்துவிடும். நம்பிக்கையோடு மனச்சுமைகளோடு இறக்கி வைக்க ஒருவர் கிடைக்கின்ற போது மட்டுமே இது சாத்தியமாகின்றது. தனியே நண்பர்கள் என்று சந்தோஷத்திலே கரம்கோர்ப்பதை விடுத்து அவர்களது உள்ளார்ந்த பிரச்சினைகளிற்கு உறுதியான தீர்வு காண வேண்டும். இங்கு இடம்பெறுகின்ற அசம்பாவிதங்களால் எனது வீட்டுக்கூடாரம் உடைந்து விழப்போகின்றது என்று எண்ணுவதை விடுத்து பண்பட்ட எம் தமிழினத்தின் தலைவிதியை நிர்ணயிக்க முற்படல் வேண்டும்.
விரக்தியும் ஆதரவற்ற நிலையுமே பதின்ம வயதுக்கர்ப்பத்திற்கும் திருமணமாகாத கர்ப்பங்களிற்கும் காரணமாகி விடுகின்றது. கடல் கடந்த நாடுகளிலே இனவியல் எல்லாம் சர்வசாதாரணமே என்று புதுமைவாதிகள் புலம்பக்கூடும். எனினும் பண்பட்ட தமிழரது வழக்கங்கள் எதைச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. “தமிழன் என்றொரு இனமுண்டு தனித்தே அவர்க்கோர் குணமுண்டு” என்று அழகான வரையறை தருகின்றது. இந்த வகையிலே நோக்குகையில் இவையெல்லாம் ஓரங்கட்டப்பட்டு விடுகின்றன.
பண்பாடே ஒவ்வொரு சமூகங்களினதும் முகவரி. பல்வேறு முகவரிகள் அழிந்திருக்கின்றன. அழிக்கப்பட்டிருக்கின்றன. எப்போது ஒரு இனத்தின் பண்பாடு பாரம்பரியங்கள் சீரழிக்கப்படுகின்றதோ அன்றே அவ்வினம் அழிவை நோக்கிச் செல்கின்றது என்பது நம்பிக்கை. பண்பாடானது எப்போதும் வளர்ச்சிப்பாதையிலே செல்ல வேண்டும்.

நாம் தெரிந்தோ தெரியாமலோ தனித்துவ கலாச்சார பண்பாட்டுக் காரணிகளை இழந்து மேற்கத்தைய பண்பாட்டுக்காரணிகளை அணிந்து கொண்டிருக்கின்றோம். தற்போது எம் இனத்தின் சமூகமயமாக்கல் காரணிகளோடு இவ் மேற்கத்தைய மயமாகுதல் கலந்துவிட்டது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நவீன உலகோடு ஒத்திசை உள்ளவர்களாக்கவே விரும்புகின்றனர். இச்செயற்பாடு எந்தளவிற்கு அனுகூலங்களைத் தருகின்றதோ அதேயளவு பிரதிகூலங்களையும் தரும் என்பதை உணர மறுக்கின்றனர். இது பிழையல்ல. தமது கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக அனைத்து நவீனமுறை கல்வித்தொழில்சார் வளங்களை ஏற்படுத்துவதிலே கவனமாயிருக்கின்றனர். இவற்றிலே நவீனத்துவம் எது என்பதனை அறியாமை காரணமாக மேற்கத்தைய நடைமுறைகள் தான் நவீனத்துவம் வாய்ந்தவை என்ற பிழையான முடிவை எடுக்கின்றனர். இதன் பிரதிகூலமே நவீனமயமாதல் என்று கூறிக்கொண்டு தமது பண்பாட்டையும் இழந்து நவீனத்துவமும் அடையாது இருப்பதையும் தொலைத்துவிடுவதே.
ஆகவே இச்சமூகம் தடம்மாறுவதிலே நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்றோரின் பங்களிப்பு இல்லாமல் இல்லை. ஆனால் தனியே பெற்றோரை மட்டுமே கூண்டிலே ஏற்றிவிட முடியாது. பெற்றோரோடு கழிக்கும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரத்தை பிள்ளைகள் யாருடன் செலவழிக்கின்றதோ அங்கும் இத்தவறுகளிற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததுவே.
சமூகத்திலிருக்கின்ற ஒவ்வொரு பிரஜையும் இதன் பாரதூர விளைவுகளை உணர்ந்து செயற்பட வேண்டும். பண்பாடு எமது இனத்தின் முகவரி என்பதை நாம் எந்தவிடத்திலும் மறந்துவிடமுடியாது.
புதுப்பானையிலே புத்தரிசி போட்டுப் பொங்குவதால் மாத்திரம் எம்வாழ்வு புதுமையடைந்து விடப்போவதில்லை. எண்ணம் சொல் செயற்பாடு இவற்றின் வழியான பண்பாடு வளம்பெறுகின்ற சில வழிகள் செயற்படுத்தப்பட வேண்டும். தேவையற்ற கலாச்சார பிறழ்வுகளிற்கு காரணமானவர்கள் சட்டத்தின்முன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டுமே நுகரும் அன்னம் போன்றவர்களாக இளைய சமூகம் மாற வேண்டும். நல்லது கெட்டது எது என்பதை பெற்றோரும் மற்றோரும் உணர்ந்து நாளைய உலகை ஆளப்போகின்ற இளைய சமூகத்தின் மனங்களிலே பதித்தல் தலையாய கடமையாகும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் காலவோட்டத்திற்கு ஏற்றது என்றாலும் நல்லவற்றை நுகர்ந்து நல்லவர்களாக மாற வேண்டும். எமது சமுதாயம் தாண்ட வேண்டிய தடைகள் நிறையவே உள்ளன. எனவே இச்சிறுதடைகளை தாண்டி புதியதோர் பூமி செல்ல தைத்திருநாளிலே உறுதியெடுப்போமாக.
என் பாடசாலைக் கால பொங்கல் சம்பந்தமான சில புகைப்படங்களை ரசிக்க
சிவஞான வைரவர் ஆலயப் பொங்கல்

உழைக்கும் வர்க்கத்தினரால் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாகவே இத் தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றது. நாளும் பொழுதும் உழவரோடு சேர்ந்து பாடுபட்டு உழைத்த பசுக்கூட்டங்களுக்கும் காளைகளுக்கும் பொங்கிப் படைக்கும் நாளே பட்டிப்பொங்கல் திருநாள்.
ஒவ்வொரு பண்டிகைகளும் விழாக்களும் எதற்காக எம்மிடத்திலே தரப்பட்டிருக்கின்றன. உண்டு உறங்கி கொண்டாடி மகிழ்வதற்கா? இல்லை. தனியே அந்த நோக்கங்களிற்காக மட்டும் எமக்கு இப்பண்டிகைகள் விழாக்கள் தரப்படவில்லை. ஒவ்வொரு கொண்டாட்டங்களின் போதும் எம்முள் இருக்கின்ற ஒவ்வொரு தீய விடயங்களை தீய குணங்களை அகற்றி வையகத்தில் மாண்பு பெறுவதற்காகவே இப்பண்டிகைகள் படைக்கப்பட்டிருக்கின்ற உண்மைத் தத்துவத்தை உணர முற்பட வேண்டும்.
மனித மாண்பை பாதிக்காத நவீன தத்துவத்தை வரவேற்போம். உலகிலே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மொழிகளில் முதலிடம் பெறுவது தமிழ் மொழியே. தமிழர்கள் தமக்கென்று தனித்துவமான பண்பாடு பாரம்பரியங்களைக் கொண்டிருப்பதனாலேயே இன்றும் தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழர் பண்பாட்டை போற்றாத மேதைகள் இல்லை. தம் கவிவரிகளிற்குள் சிறைப்பிடிக்காத கவிஞர்கள் இல்லை எனலாம். அந்தளவிற்கு தமிழ்மொழி ஆழப் பரந்திருக்கின்றது. மொழி என்கின்றபோது அதை உயிர்நாடியாக சுவாசிக்கும் இனத்தவர்கள் வாழ்வியலும் தவிர்க்க முடியாததுவே.

அப்படியான தமிழர் வாழ்வியல் பண்பாடுகள் தடம்மாறி சென்றுகொண்டிருக்கின்றது. ஒருவனுக்கு ஒருத்தி என்றும் கற்பில் சிறந்தவர் கண்ணகி என்றும் காவியங்களில் எழுத்து வடிவில் இருந்தால் போதாது. அது எந்த அளவிற்கு நடைமுறையிலிருக்கின்றது என்பது வேதனைப்பட வேண்டியதொன்றே.
கற்பதற்காக பள்ளி சென்ற மாணவி கர்ப்பமுறுவதும் தந்தையாலே மகள் வஞ்சிக்கப்படுவதும் நடு இரவிலே ஏழு வயது சிறுமி பதின்ம இளைஞனால் இம்சிக்கப்படுவதும் பாதையோரங்களில் எல்லாம் இம்சைகள் தொடர்வதும் தமிழர் பண்பாட்டிற்கு ஆக்கபூர்வமாக பங்களிப்பு செய்யுமா?
பட்டாசு கொழுத்தி பொங்கிப்படைத்து உண்டு மகிழும் பொங்கலாக மட்டும் இத்திருநாள் அமைந்துவிடக் கூடாது. அதனையும் தாண்டி தமிழர் பண்பாட்டியல் உறுதியான வரம்பிற்குள் வரச்செய்யும் வரலாறாக மாற வேண்டும்.
சட்டம் போட்டு தடுப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கின்றது என்று நாம் ஒதுங்கி விட்டால் தமிழன் என்று சொல்கின்ற போது நெஞ்சை நிமிர்த்த முடியாது. மாறாக பூமாதேவியை முகத்தரிசனமே செய்ய வேண்டியேற்படுவது தவிர்க்க முடியாததுவே.
எவற்றிற்காக இச்சம்பவங்கள் அரங்கேறுகின்றன என்பதை உணர்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைக்கின்ற போது வளம்மிக்க சமுதாயம் துளிர்விட ஆரம்பித்துவிடும். நம்பிக்கையோடு மனச்சுமைகளோடு இறக்கி வைக்க ஒருவர் கிடைக்கின்ற போது மட்டுமே இது சாத்தியமாகின்றது. தனியே நண்பர்கள் என்று சந்தோஷத்திலே கரம்கோர்ப்பதை விடுத்து அவர்களது உள்ளார்ந்த பிரச்சினைகளிற்கு உறுதியான தீர்வு காண வேண்டும். இங்கு இடம்பெறுகின்ற அசம்பாவிதங்களால் எனது வீட்டுக்கூடாரம் உடைந்து விழப்போகின்றது என்று எண்ணுவதை விடுத்து பண்பட்ட எம் தமிழினத்தின் தலைவிதியை நிர்ணயிக்க முற்படல் வேண்டும்.
விரக்தியும் ஆதரவற்ற நிலையுமே பதின்ம வயதுக்கர்ப்பத்திற்கும் திருமணமாகாத கர்ப்பங்களிற்கும் காரணமாகி விடுகின்றது. கடல் கடந்த நாடுகளிலே இனவியல் எல்லாம் சர்வசாதாரணமே என்று புதுமைவாதிகள் புலம்பக்கூடும். எனினும் பண்பட்ட தமிழரது வழக்கங்கள் எதைச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. “தமிழன் என்றொரு இனமுண்டு தனித்தே அவர்க்கோர் குணமுண்டு” என்று அழகான வரையறை தருகின்றது. இந்த வகையிலே நோக்குகையில் இவையெல்லாம் ஓரங்கட்டப்பட்டு விடுகின்றன.
பண்பாடே ஒவ்வொரு சமூகங்களினதும் முகவரி. பல்வேறு முகவரிகள் அழிந்திருக்கின்றன. அழிக்கப்பட்டிருக்கின்றன. எப்போது ஒரு இனத்தின் பண்பாடு பாரம்பரியங்கள் சீரழிக்கப்படுகின்றதோ அன்றே அவ்வினம் அழிவை நோக்கிச் செல்கின்றது என்பது நம்பிக்கை. பண்பாடானது எப்போதும் வளர்ச்சிப்பாதையிலே செல்ல வேண்டும்.

நாம் தெரிந்தோ தெரியாமலோ தனித்துவ கலாச்சார பண்பாட்டுக் காரணிகளை இழந்து மேற்கத்தைய பண்பாட்டுக்காரணிகளை அணிந்து கொண்டிருக்கின்றோம். தற்போது எம் இனத்தின் சமூகமயமாக்கல் காரணிகளோடு இவ் மேற்கத்தைய மயமாகுதல் கலந்துவிட்டது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நவீன உலகோடு ஒத்திசை உள்ளவர்களாக்கவே விரும்புகின்றனர். இச்செயற்பாடு எந்தளவிற்கு அனுகூலங்களைத் தருகின்றதோ அதேயளவு பிரதிகூலங்களையும் தரும் என்பதை உணர மறுக்கின்றனர். இது பிழையல்ல. தமது கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக அனைத்து நவீனமுறை கல்வித்தொழில்சார் வளங்களை ஏற்படுத்துவதிலே கவனமாயிருக்கின்றனர். இவற்றிலே நவீனத்துவம் எது என்பதனை அறியாமை காரணமாக மேற்கத்தைய நடைமுறைகள் தான் நவீனத்துவம் வாய்ந்தவை என்ற பிழையான முடிவை எடுக்கின்றனர். இதன் பிரதிகூலமே நவீனமயமாதல் என்று கூறிக்கொண்டு தமது பண்பாட்டையும் இழந்து நவீனத்துவமும் அடையாது இருப்பதையும் தொலைத்துவிடுவதே.
ஆகவே இச்சமூகம் தடம்மாறுவதிலே நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்றோரின் பங்களிப்பு இல்லாமல் இல்லை. ஆனால் தனியே பெற்றோரை மட்டுமே கூண்டிலே ஏற்றிவிட முடியாது. பெற்றோரோடு கழிக்கும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரத்தை பிள்ளைகள் யாருடன் செலவழிக்கின்றதோ அங்கும் இத்தவறுகளிற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததுவே.
சமூகத்திலிருக்கின்ற ஒவ்வொரு பிரஜையும் இதன் பாரதூர விளைவுகளை உணர்ந்து செயற்பட வேண்டும். பண்பாடு எமது இனத்தின் முகவரி என்பதை நாம் எந்தவிடத்திலும் மறந்துவிடமுடியாது.
புதுப்பானையிலே புத்தரிசி போட்டுப் பொங்குவதால் மாத்திரம் எம்வாழ்வு புதுமையடைந்து விடப்போவதில்லை. எண்ணம் சொல் செயற்பாடு இவற்றின் வழியான பண்பாடு வளம்பெறுகின்ற சில வழிகள் செயற்படுத்தப்பட வேண்டும். தேவையற்ற கலாச்சார பிறழ்வுகளிற்கு காரணமானவர்கள் சட்டத்தின்முன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டுமே நுகரும் அன்னம் போன்றவர்களாக இளைய சமூகம் மாற வேண்டும். நல்லது கெட்டது எது என்பதை பெற்றோரும் மற்றோரும் உணர்ந்து நாளைய உலகை ஆளப்போகின்ற இளைய சமூகத்தின் மனங்களிலே பதித்தல் தலையாய கடமையாகும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் காலவோட்டத்திற்கு ஏற்றது என்றாலும் நல்லவற்றை நுகர்ந்து நல்லவர்களாக மாற வேண்டும். எமது சமுதாயம் தாண்ட வேண்டிய தடைகள் நிறையவே உள்ளன. எனவே இச்சிறுதடைகளை தாண்டி புதியதோர் பூமி செல்ல தைத்திருநாளிலே உறுதியெடுப்போமாக.
என் பாடசாலைக் கால பொங்கல் சம்பந்தமான சில புகைப்படங்களை ரசிக்க
சிவஞான வைரவர் ஆலயப் பொங்கல்
No comments:
Post a Comment